இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கப்பல் சேவையில் ஈடுபடும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை பன்னிரண்டாம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளதோடு வாரத்தில் ஆறு நாட்கள் குறித்த சேவை இடம்பெற உள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் கப்பல் சேவை இடம்பெற உள்ளமையினால் போக்குவரத்துக்கான ரிக்கெட்களை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாக அல்லது 021 2224647, 0117642117 இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து கொள்ளுமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.