ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இலங்கை நேரப்படி காலை 7.32 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.56 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.49 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக,கடந்த 30ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.