கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (13) ஏற்பட்டுள்ளது.
தீ பரவலை அடுத்து மாநகர சபையின் தீயணைப்பு படையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.