தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் சங்கத்தினர் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர்.
அதன்படி, இன்று (16) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தில் சுமார் 7,500 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இரு நாட்கள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் எங்களுக்கு நியாயமான மற்றும் உறுதியான தீர்வுகள் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.