இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்பதற்காகத் தமிழக மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த சங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி ஏலவே இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பில் மொத்தமாக இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் 6 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ள மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பேர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.