திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நேற்று ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினமான நேற்று மூன்று சிறுவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனவும் ஏனைய இருவரும் கரையேறி உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவனின் உடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம், 23 ஆம் திகதியன்று குறிஞ்சாக்கேணி கரையோரம் இருந்து கிண்ணியா நகர பகுதியை நோக்கி பயணித்த படகொன்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.