எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (23) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.
அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அவர் இன்று காலை 10 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.