மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு முதல் மேற்கு வரை வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.
சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (50-60) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
மன்னார் முதல் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலான கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
மன்னார் முதல் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலான கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.














