நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து அரசுக்கு எதிராக இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து,நேற்றையதினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் இறப்பர் தோட்டாக்ளால் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் குறித்த போராட்டக்களத்தில் கலவரம் ஏற்பட்டதில் 19 பேர் வரை உயிரிழந்தனர்.
இதை அடுத்து நேபாள பிரதமரை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழுதாள் கொடுத்துவந்த நிலையில் நேபாள பிரதமர் இன்று பதவி விளக்கினார். விலகிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேபாள பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.
அத்துடன் அரசியல் வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.














