ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டு வரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உட்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தலைநகர் சனாவில் உள்ள இராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதோடு 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















