ஹொரனை – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களே குறித்த பேருந்தில் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














