களுத்துறை, ஹசலக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹசலக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது நேற்று (23) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அகழ்வுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
சம்பவத்தில் கைதான நபர்கள் 36 மற்றும் 39 வயதுடைய பரவர்தனோய, ஹசலக பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














