உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள பதேபூர் சாலையில், வேகமாக வந்த லொறி மீது ஒரு கார் மோதிய நிலையில் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேவேளை, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் உயிரிழந்தவர்கள் காரின் சாரதி மற்றும் அதில் சென்ற 5 பேர் என தெரியவந்துள்ளது.
பித்தூருக்கு பயணம் மேற்கொள்வதற்காக, சென்ற குறித்த கார் தவறான பாதையில் சென்று லொறி மீது மோதியிருக்கலாம் எனவும் ஒருவேளை சாரதி தூங்கிவிட்டதால் விபத்து நிகழ்ந்து இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.














