• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/19
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, இலங்கை
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை அப்புறப்படுத்திய நடவடிக்கையைக் கண்டித்ததுடன், உடனே அதனை அங்கே நிறுவிட வேண்டுமென கொக்கரித்துள்ளனர்.

அதனையடுத்து மீண்டும் அதேசிலையை அதே இடத்தில் நிறுவியுள்ளனர். இடதுசாரி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களென காட்டிக் கொள்ளும் ஜேவிபி அரசு , வழக்கமான ‘சிங்கள பேரினவாத அரசு’ தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. இந்த அடாவடி ஆதிக்கப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அந்த கட்சியின் நிறுவுனர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் தாயகமான ஈழமண்ணில் கலாச்சார படையெடுப்பை நடத்தும் ஒரு வடிவமாக ஆங்காங்கே கவுதம புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மண்ணை சிங்களமயப் படுத்துவதையும் பௌத்த மயப்படுத்துவதையும் ஒரு செயல்திட்டமாக வரையறுத்துத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

வலதுசாரிகள் மட்டுமின்றி இடதுசாரிகளும் அதனைத் தொடரும் நிலை உள்ளது. இதன்மூலம், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவும் கடந்தகால ஜனாதிபதிகளைப் போலவே இலங்கை தீவைச் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியதாக நம்புகிறார் என அறியமுடிகிறது. இதற்கு அவர்களின் அரசியலமைப்புச் சட்டம்தான் வழிவகுக்கிறது.

சிங்கள – பௌத்த -பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டதாகவும், தமிழினத்தை ஒடுக்குவதற்கான பேரினவாதக் கூறுகளைக் கொண்டதாகவும் அரசமைப்புச் சட்டம் இருப்பதே இதற்கு காரணமாகும்.

அதிபர் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அரசு விரைவில் புதியதொரு அரசமைப்புச் சட்டத்தை யாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சி நிர்வாகத்தில் ‘கூட்டாட்சி’ (சமஷ்டி) நிர்வாக முறையை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஏற்கனவே, தமிழர்களின் தரப்பாக நின்று இந்திய ஒன்றிய அரசு, ‘இந்திய -இலங்கை ஒப்பந்தந்தை’ ஏற்படுத்திய வரலாறு உள்ளது. இன்னும் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திட வேண்டுமென சிங்கள ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டிய ‘தார்மீகப் பொறுப்பு’ இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அந்த வகையில், புதிய அரசியல் யாப்பில் தமிழ்த் தேசிய இனத்துக்கான முழுமுற்றான ‘தன்னாட்சி அதிகாரத்தை’ வழங்குவதற்குரிய வாய்ப்பை உருவாக்கிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழ் மக்கள் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் மக்களின் ஒரு சாரார் கடந்த காலங்களில் பௌத்த மதத்தைச் சார்ந்தும் வாழ்ந்தார்கள். தமிழில் உள்ள மணிமேகலை, குண்டலகேசி போன்ற காப்பியங்கள் இதற்கான சான்றுகள் ஆகும். ஆனால், கௌதம புத்தரின் போதனைகளுக்கு எதிராக, பௌத்த தர்மத்துக்கு முற்றிலும் விரோதமாக, கௌதம புத்தரையே இழிவுபடுத்துவதுபோன்று தமிழர்களை ஆக்கிரமிக்கும் ஒரு கருவியாக பௌத்தத்தைப் பயன்படுத்துவதையே தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

அண்மையில், நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது ஈழத்தின் களநிலையை என்னால் உணர முடிந்தது. யுத்தத்தின்போது நேரடியாகவே இனவழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்கள், இப்போதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது.

எனவே, புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய ‘சமஷ்டியை’ உறுதி செய்வதே இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் அவர்களை விடுதலை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் – சஜித் பிரேமதாச

Next Post

சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

Related Posts

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!
இலங்கை

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!
அமொிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!
இலங்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!
இலங்கை

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!
இலங்கை

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26
யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!
இலங்கை

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

2026-05-26
Next Post
சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

உருவாகிறது புதிய காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

உருவாகிறது புதிய காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

0
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

0
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

0
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

0
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26

Recent News

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.