தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில் அது , மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில், பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் 23 ஆம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்நிலையில் அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன் எனவும்
ப்ரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு எனவும் பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் எனவும் உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


















