யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தையிட்டி காணி தொடர்பாக, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் என அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.
கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.
















