• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

Rahul by Rahul
2026/01/05
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், சில சந்தர்ப்பங்களில், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது ‘செலவு செய்யப்படாத நிதி’ என்று கணிக்கப்படும் சூழ்நிலை நாட்டில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று எந்தவித தாமதமும் இன்றி தேவையான நிதியை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று  முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் (ECF) வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13% மாத்திரமே செலவிட முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதன்படி, ‘நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்’ என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு என்றும், முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

இதில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related

Tags: Governmentlkanewsnews updatesrilankaupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளியானது பராசத்தி ட்ரைலர்!

Next Post

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

Related Posts

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

2026-08-25
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!
இலங்கை

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

2026-08-25
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

2026-08-25
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

2026-08-25
Next Post
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை!

வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை!

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2026 ஆம் ஆண்டின் முதல் அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

0
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

0
ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

0
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

0
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

0
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

2026-08-25
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

2026-08-25
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.