இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மொத்தம் 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன் பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய படகையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதின் பின்னர் அவர்கள் காரைநகர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் மீன்பிடி படகையும் மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












