அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசலைகளின் 2026 கல்வியாண்டிற்கான முதல தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) தொடங்க உள்ளது.
முதல் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 5 முதல் 9 வரை நடைபெற்றது.
அதன் பின்னர், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சை பாடங்களை நடத்துவதற்கு வசதியாக ஜனவரி 10 முதல் நேற்று (20) வரை பாடசாலைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், இன்று தொடங்கும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026 பெப்ரவரி 13 வரை தொடரும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை பாடசாலைகள் மீண்டும் மூடப்படும்.
இருப்பினும், ரமலான் பண்டிகை காரணமாக பெப்ரவரி 14 முதல் மார்ச் 22 வரை முஸ்லிம் பாடசாலைகள் நீண்ட காலத்திற்கு மூடப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.











