• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

Hanushya P by Hanushya P
2026/02/12
in இந்தியா, தமிழகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துகேட்பு கூட்டத்தில் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் 16,500 ஊர்க் காவல் படை வீரர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இவர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 15 நாட்களும், குறைந்தபட்சம் 10 நாட்களும் பணி வழங்கப்படுகிறது.

ஒருநாள் பணிக்கு ரூ.560 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனால், அதிகபட்சமாக 15 நாட்களுக்கு ரூ.8,400 மட்டுமே மாத ஊதியமாக கிடைக்கிறது. அதுவும் குறித்த நேரத்தில் ஊதியம் வருவதில்லை எனவும், விலைவாசி விண்ணை முட்டும் தற்போதைய காலகட்டத்தில், இந்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாமல் திணறுவதாகவும் ஊர்க்காவல் படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் நிலையை அறிந்த திமுக, தங்களது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ‘‘ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊதியமும் உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சி முடிவடையும் தருவாயில் கூட தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் தவெக தேர்தல் அறிக்கைதயாரிப்புக்குழு தலைவர் அருண்ராஜ் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் பிப்.9-ம் தேதி நடைபெற்றது. அப்போது ஊர்க்காவல் படை வீரர்கள் சிலர் தங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளனர்.

அதில், ‘ஊர்க்காவல் படை வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் மாதந் தோறும் 25 நாட்களுக்கு குறையாமல் பணி வழங்க வேண்டும். நாளொன்றுக்கு ரூ.1,000 ஊதியமாக வழங்க வேண்டும்.

விபத்தில் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக காவல் துறைபோல தோள்பட்டை பேட்ஜ் மற்றும் சீருடைகள், காலணிகள் வழங்கவேண்டும்’’ என்று அதில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மனு கொடுத்தவர்களிடம் கேட்டபோது, ‘‘வரும் பட்ஜெட்டில் எங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் ஏதும் வராதபட்சத்தில், தவெகவின் தேர்தல் அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் இடம்பெறும்பட்சத்தில் ஊர்க்காவல் படையினர் அனைவரும் எங்களது குடும்பத்தினருடன் தவெகவுக்கு ஆதரவளிப்பார்கள்’’ என்று தெரிவித்தனர்.

Related

Tags: 16500Home Guardsupcoming elections
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

Next Post

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

Related Posts

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!
அமொிக்கா

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

2026-02-12
லம்போர்கினி கார் விபத்து; கான்பூர் புகையிலை தொழிலதிபரின் மகன் கைது!
இந்தியா

லம்போர்கினி கார் விபத்து; கான்பூர் புகையிலை தொழிலதிபரின் மகன் கைது!

2026-02-12
கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
இந்தியா

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

2026-02-11
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இந்தியா

வேலை கிடைக்காத விரக்தி- இளைஞர் தற்கொலை முயற்சி

2026-02-11
இந்தியா – அமெரிக்க ஒப்பந்த உண்மைத் தாளின் முக்கிய விதிமுறைகள் திருத்தம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா – அமெரிக்க ஒப்பந்த உண்மைத் தாளின் முக்கிய விதிமுறைகள் திருத்தம்!

2026-02-11
ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!
இந்தியா

ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!

2026-02-10
Next Post
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! - 850,000 வீடுகள் இருளில்..

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

0
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

0
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

0
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

0
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

2026-02-12
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

2026-02-12
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

2026-02-12
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

2026-02-12
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

2026-02-12

Recent News

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

2026-02-12
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

2026-02-12
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

2026-02-12
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

2026-02-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.