ஈரானின் தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுவது ‘நடக்கக்கூடிய மிகச்சிறந்த விடயம்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஈரானை வழிநடத்துவதற்கு தான் விரும்பும் நபர் யார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்கக் கூடிய தகுதியான ‘ஒரு குழுவினர் இருக்கின்றார்கள்’ என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.















