இங்கிலாந்தில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய அரசின் தூண்டுதலால் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு நேற்று கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது கடந்த டிசம்பர் மாதம் Sydney நகரில் உள்ள Bondi Beach பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை விடவும் மிகக் கொடியதாக அமைந்திருக்கும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வடமேற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள Manchester நகரில் உள்ள யூத ஜெப ஆலயத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்படடுள்ளது
38 வயதான வாலித் சாதாவ்ய் மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணையின் போது, குற்றவாளிகள் பல்வேறு ஆயுதங்களைப் பெற முயன்றதுடன், தாக்குதல் நடைபெற வேண்டிய இடங்களை முன்கூட்டியே ஆய்வு செய்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஜெப ஆலயத்தில் அதிக மக்கள் திரண்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, குற்றவாளிகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தீ,விரவாத கருத்துகளைப் பரப்பியதுடன், தாக்குதலுக்கான உந்துதலையும் அங்கிருந்து பெற்றிருந்தனர். அவர்கள் இடையே பரிமாறப்பட்ட தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் வழக்கின் முக்கிய சான்றுகளாக அமைந்தன.
இதேவேளை இந்த வழக்கு இங்கிலாந்தில் மத அடிப்படையிலான தீவிரவாதம் மற்றும் வெறுப்பு குற்றச்செயல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. குறிப்பாக யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் அதிக விழிப்புடன் செயல்பட்டு வருவதுடன் , பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
















