20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை (Teenage girl) பலாத்காரம் செய்த நபர் ஒருவர் தற்போது டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகேநபரே இவ்வாறு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது சந்தகநபரான 25 வயதாக இருந்த கென்னடி ஜிம்மி (Kennedy Jimmy), (Bedfordshire.) பெட்ஃபோர்ட்ஷையரின் (Shefford, ) ஷெஃபோர்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் சந்தித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கடைக்குள் சென்றபோது, கென்னடி அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது (Staffordshire) ஸ்டாஃபோர்ட்ஷையரில் வசித்து வரும் கென்னடி, டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதாக (Bedfordshire.) பெட்ஃபோர்ட்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதை அடுத்து நேற்றுமுன்தினம் லூடன் கிரவுன் நீதிமன்றத்தில் (Luton Crown Court) ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து கென்னடிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் பொருட்கள் வாங்கச் சென்றபோது, கென்னடி அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘கென்னி’ என்று மட்டுமே தெரிந்த அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முக்கிய குற்றப்பிரிவு மூலம் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து நடத்தப்பட்ட சிறப்பு மறுஆய்வில், டிஎன்ஏ பொருத்தம் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, தற்போது 44 வயதாகும் கென்னடி ஜிம்மி மீது அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை அணுக முடியாதபடி ஆயுட்கால தடை உத்தரவும் (Life-long restraining order) பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த குற்றத்திலிருந்து ஜிம்மி தான் தப்பித்துவிட்டதாக நினைத்தார் எனவும் , ஆனால் தடய அறிவியல் வளர்ச்சியும் பொலிஸ் குழுவின் உறுதியும் உண்மையை நிரூபித்துவிட்டது எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.













