• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/27
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘பொடி லெசி’ முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள், துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார்.

பின்னர், 2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார்.

நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர்.

இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தியா சென்றிருந்ததுடன், அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

Related

Tags: arrestCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

Related Posts

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
இலங்கை

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

2026-04-06
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!
இலங்கை

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!
இலங்கை

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!
இலங்கை

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
Next Post
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

0
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

0
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

0
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

0
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

0

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

2026-04-06

Recent News

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.