மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு அருகில் தாக்குதலுக்கு உள்ளான முதலாவது ஈரானிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதியன்று இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் விபத்துக்குள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய போர்க் கப்பலான IRIS Dena வில் இருந்து மூழ்கிய கப்பலில் இருந்த ஈரானிய கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படை இந்த மீட்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதியன்று பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களில் 32 பேர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்பு அழைப்பு வந்த நிலையில் இலங்கை கடற்படை துரிதமாக நடவடிக்கை எடுத்து 87 சடங்களை மீட்கியுள்ளது. அதேவேளை இலங்கை கடற்படையால் பாதுகாக்கப்பட்ட மற்ற ஈரானிய கப்பலில் 204 பேர் வெற்றிகரமாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அந்த கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் அழைத்தவர்களில் 53 அதிகாரிகள், 84 கேடட் அதிகாரிகள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் உள்ளனர்.
நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும், உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க் கப்பல் தொடர்பான தேடுதல் நடவடிக்கையில் இந்தியா இணைந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகளில்l ஈரான் எதிரான கூட்டுப் போரின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் இணைந்து இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்களை ஓமான் வளைகுடாவில் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. ஈரானிய ட்ரோன் கப்பலையும் அமெரிக்கா மூழ்கடித்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில், எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையோ எந்தவொரு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதிப்படுத்தினார். அவர் எமது அரசாங்கம் நடுநிலை மற்றும் மனிதாபிமானத்தோடு செயல்படுவதாகவும், எந்த மனிதனும் எந்த காரணத்திற்காகவும் இறக்கப்பட வேண்டியதல்ல எனவும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்போது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைந்ததாகக் கேள்வி எழுப்பினார். 208 பேரை பாதுகாப்பாக மீட்குவது மிகப்பெரிய சாதனைஇ ஆனால் இதற்கு முன்னதாக 130 பேரும் தமது உயிரைத் தியாகம் செய்தனர். அந்த 130 பேரைக் காப்பாற்ற முடியாத சூழல் இருந்த போதும், குறைந்தது 208 பேர் பாதுகாக்கப்பட்டு உயிருக்காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
இதனால், இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கம் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பையும், மனிதநேயத்தை நிலைநாட்டி செயல்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.













