மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorbike) மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக டெர்பிஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெர்பிஷயரின் செஸ்டர்ஃபீல்ட் (Chesterfield) பகுதியில் உள்ள நியூபோல்ட் வீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் 14 வயதான பின்லே டாவ்சன் (Finley Dawson) ஓட்டிச் சென்ற மின்சார மோட்டார் சைக்கிள், கியா ஸ்போர்டேஜ் (Kia Sportage) ரக காருடன் மோதியது.
இந்த மோட்டார் சைக்கிளில் பின்லேவுடன் 15 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் பயணித்துள்ளார்.
மோதலின் தாக்கத்தால் இரு சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்லே டாவ்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த 15 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
கார் ஓட்டுநர் இந்தச் சம்பவத்தின் சாட்சியாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
விபத்து நடந்த விதம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களின் குடும்பத்தினரும் இணைந்து வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், இத்தகைய வாகனங்களை வீதிகளில் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளனர்.
“இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பின்லே அந்த தடையை உடைத்து சென்றுள்ளார் .இதனால் அவரது உயிர் பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.















