நியூஸிலாந்து, கிறைஸ்ட்சர்ச் புறநகர்ப் பகுதியான பர்ன்சைடில் இன்று (12) அதிக ஆபத்துள்ள வெடிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் சிலர் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.
ஷெஃபீல்ட் கிரசென்ட் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.20 மணியளவில் பொலிஸாருக்குப் வெடிப்பொருட்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த பகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது,
குறிப்பாக பொதுமக்களை உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் ஒரு வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு பணியமர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.













