ஈராக்கிய கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களைத் தாக்கி, எரிசக்தி விநியோகங்கள் மீதான பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் அதிகரித்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடந்த இரண்டு நாட்களில் ஆறாவது கப்பல் மீதான தாக்குதலாகும்.
இதேவேளை மேதல் நிலை தொடரும் நிலையில் சர்வதேச சந்தையில் இன்று எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களை எட்டியது.
சர்வதேச எரிசக்தி நிறுவனம் உலக சந்தையில் இருப்புக்களில் இருந்து சாதனை அளவில் 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிட ஒப்புக்கொண்ட போதிலும் இந்த உயர்வு ஏற்பட்டது.
இதனிடையே, மோதல்கள் விரிவடைந்து வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றதாக தனது கூற்றை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.















