2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி வாஜித் கான் பிட்கர் முறைப்பாடு அளித்துள்ளார்.
அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டிக்குப் பின்னர் அணியின் மைதான கொண்டாட்டங்களின் போது சகலதுறை வீரர் தேசியக் கொடியை அவமதித்ததாக சிவாஜி நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின.
அதில் பாண்ட்யா தேசியக் கொடியை தோளில் சுமந்து கொண்டாடுவதைக் காட்டியது.
கொண்டாட்டங்களின் போது கிரிக்கெட் வீரர் நடனமாடுவதையும், பின்னர் கொடியை போர்த்திக் கொண்டு மேடையில் படுத்துக் கொள்வதையும் காண முடிந்தது என்று முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செயல் தேசியக் கொடியை அவமதிப்பதாகும் என்றும், தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 இன் விதிகளை மீறுவதாகவும் என்றும் அவர் வாதிட்டார்.
















