கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் மொத்த விற்பனை சந்தைகளில் ஆரம்ப வர்த்தகத்தில் எரிவாயு விலைகள் சுமார் 25% உயர்ந்தன, பின்னர் சற்று குறைந்தன.
ஐரோப்பாவில் எரிவாயு விலை, ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உள்ளது.
எண்ணெயின் விலையும் உயர்ந்து வர்த்தகமாகிறது; பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 115 டொலர்களை தாண்டி, 7% உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் எரிவாயு விலை தற்போது 23% உயர்ந்துள்ளது.
கட்டாரின் ராஸ் லஃபான் எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலினால் அங்குள்ள நிலையங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கட்டாரில் மேலும் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ஈரானை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதேநேரம், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு நிலையம் மீது புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் சவுத் பார்ஸ், உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களங்களில் ஒரு பகுதியாகும்.
இப்பகுதியில் கட்டார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை இயக்கி வருகின்றன.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் ஒரு அழகு சாதன நிலையத்தின் மீது விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.















