ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.
மத்திய கிழக்கில் தொடரும் மோதலுக்கு மத்தியில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்ய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பின் போது, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் தடையற்ற விநியோகத்தையும், அரசின் இயந்திர அமைப்பின் செயல்பாட்டையும் குறைந்தபட்ச இடையூறுடன் உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஜனாதிபதி விவரித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதித் துறைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரையில் விரிவாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்குக் கூடவுள்ளது.













