பிரித்தானியாவின் ரிபார்ம் யுகே (Reform UK) கட்சி, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் (Asylum Claims) மீண்டும் மறுபரிசீலனை செய்யப்போவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
நைஜல் ஃபராஜ் தலைமையிலான ‘ரிபார்ம் யுகே’ கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் 2021-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் உடனடியாக ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், தகுதி நீக்கம் செய்யப்படுபவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் மற்றும் ‘பாதுகாப்பான நாடு’ என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் என சுமார் 4,00,000 பேர் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் பேரை நாடு கடத்துவது இந்த கட்சியின் முக்கிய இலக்காக காணப்படுகிறது.
மேலும், நாடு கடத்தல் நடவடிக்கைகளை எளிதாக்க, ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையிலிருந்து (ECHR) பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரிபார்ம் யுகே கட்சியின் இந்த அறிவிப்பு பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
















