இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி உயிர்களை தாம் நினைவுகூர்வதாகவும் அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், இந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மீண்டு வர முயலும் குடும்பங்கள் பற்றிய சிந்தனைகள் தனது மனதில் இருப்பதாகவும் , ஒரு தேசமாக, துயரத்திலும் உறுதியிலும் தாம் ஒன்றுபட்டு நிற்பதாகவும் எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது எனவும் பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனவும் இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.















