2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 32 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி தனது சிறப்பான பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டி நேற்றிரவு (22) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது பந்து வீச்சினை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸ் போக்கினை லக்னோ அணியின் முன்னணி பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தனது சிறப்பான வேகப்பந்து வீச்சு மூலம் மாற்றியமைத்தார்.
அவரது பந்து வீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ஆரம்பத்திலேயே நிலைகுலையச் செய்தன.
அவருடன் இணைந்து, மொஹ்சின் கான், இளம் வயது நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஷிம்ரான் ஹெட்மயரை ஆட்டமிழக்கச் செய்தார்.
சிறப்பாகப் பந்துவீசிய பிரின்ஸ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தார்.
இதனால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 159/6 என்ற சராசரிக்கும் குறைவான ஓட்டத்துடன் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த மூவரும் இணைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் டாட் பந்துகளை வீசி, ராஜஸ்தான் அணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தினர்.
ரவீந்திர ஜடேஜா மாத்திரம் அதிகபடியாக 29 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.
எனினும், ஒழுங்கற்ற முறையில் இலக்கை விரட்டியதால் அவர்களின் முயற்சிகள் வீணாயின.
மிட்செல் மார்ஷ் விடாமுயற்சியுடன் 55 ஓட்டங்கள் எடுத்தபோதிலும், மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.
சுமாரான 160 ஓட்டங்களை துரத்திய லக்னோ அணியால் ஒருபோதும் வேகத்தைப் பெற முடியவில்லை.
மேலும் 18 ஓவர்களில் வெறும் 119 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், நாந்த்ரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா ஆகியோர் அதிகபடியாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தெரிவானார்.
இந்த வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.













