பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக இலங்கை பொலிஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி,
இலங்கை பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் காவலர்கள், பெண் பொலிஸ் காவலர்கள் மற்றும் பொலிஸ் சாரதிகள் ஆகியோரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோரி, 2026 மார்ச் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு எண் 2482 வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இணையவழி விண்ணப்ப முறை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி 2026 மே 8.
பயிற்சி காவலர் மற்றும் பெண் காவலர் பதவிகளுக்கான வயதுத் தகுதி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 24 வயது ஆகும்.
பயிற்சி காவலர் சாரதி பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அனைத்துப் பதவிகளுக்குமான வயது வரம்பு 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் உண்மையற்றவை என பொலிஸார் அந்த வர்த்தமானியில் குறிப்பிட்டுள்னர்.
இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிய நபர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர், மேலும் இதுகுறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
போலியான கூற்றுக்களைப் புறக்கணித்து, உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே விண்ணப்பிக்குமாறும், அதற்கேற்ப நேர்காணல்களில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














