கடந்த மாதம் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நார்விச் (Norwich) நகருக்கு அருகிலுள்ள தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew) மேல்நிலைப் பாடசாலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக உலோகக் கண்டறியும் கருவிகள் (Metal Detectors) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் நார்விச் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், கத்திக் குத்து சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கையடக்க உலோகக் கண்டறியும் கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
கடந்த மார்ச் 11-ஆம் திகதி, இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் பதின்ம வயது மாணவி ஒருவர் முதுகில் கத்தியால் குத்தப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து பாடசாலை உடனடியாக மூடப்பட்டு (Lockdown), மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலையை நிர்வகிக்கும் ‘பிராட் ஹொரைசன்ஸ் எஜுகேஷன் டிரஸ்ட்’ (Broad Horizons Education Trust) பாடசாலையில் ஊழியர்களால் அவ்வப்போது, சீரற்ற முறையில் (Random basis) கையடக்க உலோகக் கண்டறியும் கருவிகள் மூலம் சோதனைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இது பாடசாலையில் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டறிந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் அரசாங்கம் வெளியிட்ட அலைபேசி பயன்பாடு குறித்த வழிகாட்டல்களின் ஒரு பகுதியாகவே இது முன்னெடுக்கப்படுகிறது.
கத்தி கலாச்சாரத்திற்கு எதிரான ‘ஜோ டிக்ஸ் அறக்கட்டளை’ (Joe Dix Foundation) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.
1,800-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தப் பாடசாலை , 2025 ஏப்ரல் மாதம் நடைபெற்ற ‘ஆப்ஸ்டெட்’ (Ofsted) ஆய்வில் “சிறந்த பாதுகாப்பு” கொண்ட பாடசாலை எனத் தரம் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.














