நாட்டில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியின் இன்று காலை தமது கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார, ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த கடிதம் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மே தின நிகழ்வில்ன்பொது, நிலக்கரி ஊழல்கள் தொடர்பாக ஜேவிபி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்து தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் அல்லது பிற அழுத்தங்கள் இன்றி, ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆணைக்குழுவிற்குத் தேவையான சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு என்றும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.














