சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை முன்னோடியாக அடையாயப்படுத்தவேண்டும் எனவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மதிப்பளித்து செயற்படும் நாடாக பரிவர்த்தனை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் அண்மைய வரலாற்றில் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படையினரை நினைவு கூறுகின்றோம்.
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட 17 ஆவது ஆண்டு பூர்த்தியில் படையினரை கௌரவத்துடன் நினைவு கூறுகின்றோம்.
தங்களுக்காக அன்றி நாட்டிற்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த அனைத்து படைவீரர்களுக்கும் கௌரவத்தினை நாம் காணிக்கைகளாக்குகின்றோம்.
குறிப்பாக உயிர்களை தியாகம் செய்தபடையினரை இந்த உலகுக்கு கொண்டுவந்த பெற்றோரையும் இந்த நேரத்தில் கௌரவத்துடன் நினைவு கூறுகின்றோம்.
படையினர் தங்களின் உயிரை தியாகம் செய்ததன் பிரதிபலனான சுதந்திரத்தினை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் போராடிய படையினர் தங்களின் உயிர்களை தியாகம் செயதிருக்காவிட்டால் நாம் இன்னும் அச்சம் நிறைந்த இருண்ட யுகத்திலேயே வாழ்ந்திருப்போம்.
நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் படையினரின் அர்ப்பணிப்பு வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்றாக எழுதப்படும்.
நாட்டிற்கான போராட்டத்தில் உயிர்நீத்த படையினரின் குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது.
இந்த நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.
யுத்தம் எந்தளவு மோசமானது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அனைவரும் அறிவோம்.
நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்பதே நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த படையினரின் குறிக்கோளாக இருந்தது.
அவர்களின் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிலிருந்து விலகமாட்டோம்.
ஒற்றுமை அபிவிருத்தி மக்களின் வாழ்க்கை பாதுகாப்பு ஆகியவற்றினை முன்னிறுத்தி பயணிக்கும்போதே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் அதனை விடுத்து இனவாதம் மதவாதம் வைராக்கியம் போன் குரோத மனப்பான்மையுடன் செயலாற்றும் போதும் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது.
சர்வதேசத்தின் மத்தியில் நாம் இலங்கையை முன்னோடியாக அடையாயப்படுத்தவேண்டும்.
நாட்டில் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மதிப்பளித்து செயற்படும் நாடாக பரிவர்த்தனை அடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. என தெரிவித்தார்.













