அங்குலான, மொரட்டுவ கடற்கரைக்கு அப்பால் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போன கடற்படை அதிகாரியைத் தேடும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில், அங்குலான, மொரட்டுவ கடற்கரையிலிருந்து 3 கடல் மைல் தொலைவில், ரோந்துப் பணியை முடித்து கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று கவிழ்ந்தது.
அப்பகுதி மீனவ சமூகம், இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அங்குலான பொலிஸார் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில், 12 மாலுமிகளில் 11 பேர் மீட்கப்பட்டனர்.
அவர்கள் தற்போது கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றொரு கடற்படை அதிகாரியைத் தேடும் பணி இன்று (17) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது, ஆனால் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
காணாமல் போனவர், பொரலஸ்கமுவ, வேரஹேரவைச் சேர்ந்த கடற்படை லெப்டினன்ட் உதயப்பிரிய ஆவார்.
இதற்கிடையில், இலங்கை கடற்படையின் சிறப்பு மூழ்காளர் குழுக்களின் உதவியுடன், சேதமடைந்த கடற்படை அதிவேகத் தாக்குதல் படகை மீட்கும் பணிகள் நேற்று (16) தொடங்கின.
கொந்தளிப்பான கடலும் பலத்த காற்றும் படகை மீட்பதை கடினமாக்கியுள்ளன.













