• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடையாற்றிய ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மர்மான மரணம் தொடர்பான விசாரணை நேற்று குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மரணமடைந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்ட குழுவினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் சாட்சியமளித்தனர்.

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹணவினால் வழக்கின் சாட்சியங்கள் வழிநடத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் மனைவியான நிஸ்சங்க ஆராச்சிலாகே சீலவதி சாட்சியமளிக்கையில், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தாம் பாடசாலைக்குச் சென்றுவிட்டு முற்பகல் 10.50 அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் கணவர் வீட்டில் இல்லாததால், குடும்ப நண்பரான உதய மற்றும் தோட்டத்தில் வேலை செய்த ரணவீர ஆகியோருடன் இணைந்து தேடியதாகக் கூறினார்.

பின்னர் வெற்றிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கருணா என்பவர் கணவர் தோட்டத்தின் நடுவே விழுந்து கிடப்பதாகத் தகவல் தந்ததாகவும், அங்கு சென்றபோது அவர் விழுந்து கிடந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் 1990 அவசர நோயாளர் காவுவண்டி சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சோதித்து அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சான்று பொருட்களாக நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்ட கணவரின் ஆடைகள், காலணிகள் மற்றும் காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தி ஆகியவற்றை அவர் அடையாளம் காட்டினார்.

ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்படும் பல்வேறு கேள்விகள் தங்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட மனைவி, தனது கணவரின் மரணம் குறித்து எந்தவொரு இடத்திலும் தாம் சந்தேகம் எழுப்பவில்லை என்றும், தற்போதும் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறினார்.

இதனிடையே, உயிரிழந்தவரின் மகள் சாட்சியமளிக்கையில், அன்றைய தினம் தாம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் எவ்வித சத்தமும் கேட்கவில்லை என்றும், தந்தை முந்திரி பழம் பறிப்பதற்காகத் தோட்டத்தின் கீழ் பகுதிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார் என்றும் குறிப்பிட்டார்.

மரணமடைந்தவரை முதன்முதலில் பார்த்த கருணாவதி சாட்சியமளிக்கையில், வழக்கமாக வெற்றிலை பறிக்கும் பக்கத்தில் அல்லாமல் தோட்டத்தின் மறுபக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் தாம் எதையும் பார்க்கவில்லை என்றும், பின்னர் நடந்து சென்றபோது ரங்க தோட்டத்தின் நடுவே விழுந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டதாகவும் கூறினார்.

இதனிடையே, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினாரா என்று பொலிஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்மன்பில, தாம் அவ்வாறான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவொன்றை நியமித்து அனுப்பப்பட்ட கடிதத்தில் “மனைவி சந்தேகம் தெரிவிப்பதால் நியமிக்கப்படுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை மட்டுமே தாம் ஊடகங்களுக்குச் சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

உதய கம்மன்பில சார்பில் சட்டத்தரணி அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகியிருந்தனர்.

மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்வதை எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: Court orderranga nishanthasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச தேயிலை தினம் இன்று!

Next Post

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Related Posts

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கை

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு
இலங்கை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-26
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு
இலங்கை

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

2026-06-26
Next Post
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் - சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை - யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-26

Recent News

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.