பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோயான மெலனோமா (melanoma) பாதிப்புகள் முன்முறையாக ஆண்டுக்கு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Cancer Research UK வெளியிட்ட தகவலின்படி, 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 20,980 புதிய மெலனோமா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சுக்கு (UV) நீண்ட நேரம் உட்படுவதே நோய் அதிகரிக்க முக்கிய காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 2040 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 26,500 வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்














