தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
டெல்லி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ விரிவாக்கம், நிதி ஒதுக்கீடு மற்றும் மீனவர்கள் கைது உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பாக மனு வழங்கியுள்ளார்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பானது டெல்லி பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்த நிலையில், திடீரென இரத்து செய்யப்பட்டது.
இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஆனால், திட்டமிடப்பட்டிருந்த அந்த சந்திப்புகள் நடைபெறாமல் போனதுடன், செய்தியாளர்களையும் சந்திக்காமல் முதல்வர் விஜய் டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.














