தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்றிருந்த விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூன்று பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த பாதுகாப்பு வேலியின் மீது டிப்பர், மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிப்பரின் பின்னால் பயணித்திருந்த கொன்கிரீட் கலவை கலக்கும் வாகனத்துடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.













