அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் நிச்சயமற்ற முடிவின் மீது உலக சந்தைகள் கவனம் செலுத்தியதால் இன்றைய (04) தினம் பவுண்டின் பெறுமதியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.
மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்தது.
இது ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உலக சந்தைகள் போர் நிறுத்தம் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருந்த நிலையில், ஸ்டெர்லிங் பவுண்ட்டின் பெறுமதி 1.342 அமெரிக்க டொலர்கள் என்ற அளவில் நிலைபெற்று இருந்தது.
மேலும் எண்ணெய் விலைகளும் பெரும்பாலும் மாற்றமின்றி இருந்தன.
அதேநேரம், யூரோவுக்கு எதிராக, பவுண்டும் இன்றைய தினம் 86.48 பென்ஸ் என்ற அளவில் மாற்றமின்றி இருந்தது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பிரிட்டனின் நாணயம் பல்வேறு திசைகளில் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றது.
பெப்ரவரி 27 முதல் டொலருக்கு எதிராக பவுண்டின் பெறுமதி சுமார் 0.5% சரிந்துள்ளது, ஆனால் யூரோவுக்கு எதிராக ஏறக்குறைய 1.5% உயர்ந்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதும், இங்கிலாந்து வங்கியின் வட்டி விகித உயர்வுகள் மீதான மாறிவரும் கணிப்புகளும், அரசியல் நிச்சயமற்ற தன்மைகளும் பவுண்டின் ஏற்ற இறக்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன.














