2026 ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இரு நாடுகளும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பரஸ்பர தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரானும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று (08), தனது நாடு தற்போதைக்கு போரைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறினார்.
ஆனால், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான போராட்டம் முடிவடையவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கு வேதனையான பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, தமது ஆயுதப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வந்தது.
அதேநேரம், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவுடன் இஸ்ரேலியப் படைகள் சண்டையிட்டு வரும் லெபனான் உட்பட, இஸ்ரேல் மேலும் தாக்குதல்களை நடத்தினால் மிகக் கடுமையான மற்றும் நசுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அது உறுதியளித்தது.
பெய்ரூட் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது.
இஸ்லாமியக் குடியரசில் உள்ள இராணுவத் தளங்கள் எனக் கூறி, இஸ்ரேல் திங்கட்கிழமை அதிகாலையில் பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் பலவீனமான இராஜதந்திர முயற்சிகளைப் பாதிக்கும் எனக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு தரப்பினரையும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு வலியுறுத்தி, நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
















