பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சமந்த வித்யாரத்ன பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்தஜயசிங்க தலைமையில்
விசேட கலந்துரையாடல் இன்று (09) பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியை சட்டபூர்வமாக ஒதுக்குவது தொடர்பாகவும், திட்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உடனடி தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிட நிர்மாண தீர்வுகளை விரைவாக வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் , விஞ்ஞான ஆய்வகம், கணனி கூடம், நூலகம் மற்றும் விளையாட்டுப் பிரிவைக் கொண்ட முழுமையான வசதிகளுடைய தமிழ் மொழி மூல 1AB மாதிரி பாடசாலைகளை உருவாக்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, மலையக கல்வி அபிவிருதிக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விரைவான நடவடிகைக்களுக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளிதார்.
இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களை பிரதிநிதிதுவப்படுதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.













