16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் சேவைகளை வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியம் தடை விதிக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று (15) அறிவித்தார்.
இணையத்தில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்தத் தடையில் ஸ்னாப்சாட், டிக்டோக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற தளங்கள் இடம்பெறலாம்.
இந்த சட்டத்தின் முதல் தொகுப்பு 2027 ஆம் ஆண்டின் வசந்த காலத்திலேயே அமலுக்கு வரக்கூடும்.
ஐக்கிய இராச்சியம், கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அவுஸ்திரேலியச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தனது அணுகுமுறையை வகுக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், சிறுவர்களுக்கு குறிப்பாகத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் அம்சங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நாடு மேலும் ஒரு படி முன்னேறும்.
16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு நேரலை ஒளிபரப்பு மற்றும் முன்பின் தெரியாதவர்களுடனான தகவல் தொடர்பைத் தடுப்பது இதில் அடங்கும்.
அதே சமயம், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு இதேபோன்ற பாதுகாப்புகள் இயல்பாகவே செயல்படுத்தப்படும்.


















