யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் (16) காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இவ் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆனது வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் யாழ் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் தலைமையில் இடம்பெற்றது.
குறிப்பாக இந்த அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி இடம்பெற்றதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என பலரும் கலந்து கொண்டனர்.















