அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அறுபது நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள பின்னணியில், ஹார்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பாகிர் காலிபாஃப் (Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
ஜி7 மாநாட்டில் எட்டப்பட்ட இந்த வரலாற்று உடன்படிக்கையின்படி, லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போரை நிறுத்தி, ஹார்முஸ் நீரிணையின் கடல் முற்றுகையை முப்பது நாட்களுக்குள் நீக்க அமெரிக்கா இணங்கியுள்ளது.
இதற்குப் பதிலாக தனது அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், ஹார்முஸ் நீரிணையில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு முன்னூறு பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















