இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது.
சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லல் மற்றும் சோதனை செய்தல் என பாதுகாப்பு படை வீரர்களும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகாரம் செயலியும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆள் மாறாட்டத்தை தடுக்க நேற்றும், இன்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















